Saturday, 30 April 2016

VIT UniversityEntrance Result Published








விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், முதல் மூன்று இடங்களை ஆந்திரா, குஜராத், புது தில்லி மாநில மாணவர்கள் பெற்றனர். விஐடி பல்கலைக்கழக வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு (2016) பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார். இதுதொடர்பாக, ஜி.விசுவநாதன் கூறியதாவது: நிகழாண்டு பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த 6 முதல் 17-ஆம் தேதி வரை இந்தியாவிலுள்ள 118 நகரங்களிலும், வெளிநாட்டில் துபை, குவைத், மஸ்கட் ஆகிய இடங்களிலும் கணினி முறையில் நடைபெற்றன. இதில் 2,12,238 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், ஆந்திர மாநிலம், ஸ்ரீ சைதன்யா ஜுனியர் கல்லூரி மாணவர் சேவாகுல வம்சி முதலிடத்தையும், குஜராத் மாநிலம் செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவர் மோஹில் பட்டேல் இரண்டாமிடத்தையும், புது தில்லி டிஏவி பப்ளிக் பள்ளி மாணவர் சத்யஜித் கோஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். நுழைவுத்தேர்வில் ரேங்க் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவ, மாணவியர் விஐடியில் சேருவதற்கான கலந்தாய்வு மே மாதம் 9-ஆம் தேதி முதல் விஐடி வேலூர், சென்னை வளாகங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதன்படி, 1 முதல் 8 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 9-ஆம் தேதியும், 8,001 முதல் 12 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 10-ஆம் தேதியும், 12,001 முதல் 16,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 11-ஆம் தேதியும், 16,001 முதல் 20,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 12-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஐடியின் ஜி.வி. பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெற்று விஐடியில் சேரும் மாணவ, மாணவியருக்கு பி.டெக். பட்டப்படிப்பின் 4 ஆண்டு காலமும் 100 சதவீத படிப்பு கட்டணச் சலுகையும், விஐடி நுழைவுத்தேர்வில் 10 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் ரூ. 50 ஆயிரம் கட்டணச் சலுகையும், 10,001 முதல் 20,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. விஐடி நுழைவுத் தேர்வு முடிவுகளை


 
www.entrance corner.com,  

ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றார் வேந்தர் ஜி.விசுவநாதன்.

No comments: